Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 110


அழகியசிங்கர்

புனை கதைகள்

சேது மாதவன்




காலில் செருப்பின்றி
நான்கு  மைல் தொலைவு
நடந்து சென்று படித்தது...
மூன்று ஜோடி உடைகளையே
மாற்றி மாற்றிப் போட்டது
ஐந்து பைசா பென்சிலைத் தொலைத்து
அப்பாவிடம் அடி வாங்கியது....
பள்ளியிறுதி வகுப்பு வரை
தமிழ் மொழியில் கற்றது.
ஒரு புத்தகத்தில் அடங்கிய
புனை கதைகளாக விரிகின்றன
இத்தனையும் என் மகனுக்கு


நன்றி :  உலா பதிப்கம், 132 வங்கி ஊழியர் குடியிருப்பு, திருவனைக்காவல், திருச்சிராப்பள்ளி 620 005

Comments