Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 20



நானும் என் நாடகங்களும்



பேசுவோர் : எஸ் எம் ஏ ராம்


இடம் : அலமேலு கல்யாண மண்டபம
அகஸ்தியர் கோயில் பின்புறம்
19 ராதாகிருஷ்ணன் தெரு
தி நகர், சென்னை 600 017

தேதி 20.02.2016 (சனிக்கிழமை)
நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு : எஸ் எம் ஏ ராம் என்கிற பெயரில் எழுபதுகளின் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய இவரது முழுப் பெயர் எஸ் மோகன் அனந்தராமன்.1979 ஆம் ஆண்டு வெளி வட்டங்கள் என்ற பெயரில் நாவல் எழுதி உள்ளார்.70 களின் இறுதியில் நவீன நாடகங்கள் என்ற அடையாளத்தோடு, வடிவம், உள்ளடக்கம், இவை இரண்டிலும் மரபு நாடகங்களிலிருந்து மாறுபட்டனவாய்த் தமிழில் புதிதாய்க் கிளர்ந்தெழுந்த நாடக மறுமலர்ச்சி இயக்கத்தில் இவர் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளார். விற்பனைக்கு அப் புத்தகம் கூட்டத்தில் கிடைக்கும்.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர் - ஆடிட்டர் கோவிந்தராஜன்

கூட்டம் பற்றிய அறிவிப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.



Comments

கூட்டம் சிறப்புற
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்