Skip to main content

கையறு நிலை


வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்

இடைவெளியின்றி ஜொலிக்கின்றன

காற்று வெளியெங்கும் பூ வாசம்மன

வெளியை மயக்குகின்றன

வெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும்

கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றன

பேரவஸ்தையானதொரு விசும்பல்

ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றன

குட்டியை பறிகொடுத்த

யானையின் பிளீறிடல் சத்தம்

வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றன

இரவுக்கு முத்தம் தந்து

வழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள்

தனது வாழ்வினூடே

குட்டி குட்டி கதைகளை

சேகரித்து வைத்திருக்கின்றார்கள்

பாட்டிமார்கள்

அநீதியை எதிர்த்து சமர்

செய்யாமல்

கையறு நிலையில்

நின்று கொண்டிருந்தார் கடவுள்

அவரது கட்டற்ற


கட்டற்ற அற்புதசக்தியை


கடன் வாங்கிப்


போயிருந்தது சாத்தான்.

Comments