Skip to main content

ஒரு கவிதை




நான்

கூச்சலிட்டுக் கொண்டாடுகிறேன்


என்னுடையதல்ல


இந்த வெற்றி



தேம்பியழுகிறேன்


எனக்கு சம்பந்தமில்லாதது


இந்தத் தோல்வி


ஆடிக்களைத்த


மைதானத்தை நடந்தளந்ததைத் தவிர


சொல்வதற்கு எதுவும் இல்லை



வெற்றியுமில்லை


தோல்வியுமில்லை

Comments

Anonymous said…
உங்க பெயரருக்கும் கவிதைக்கு நல்ல பொருத்தம்.
நல்லா இருக்குங்க.
Anonymous said…
'பெயருக்கும் கவிதைக்கும்' என்றிருக்க வேண்டும்.
வாழ்த்துகள் மண்குதிரை, கவிதை நன்றாக உள்ளது
anujanya said…
நல்லா இருக்கு ம.குதிரை. சும்மா ஒரு மொழி விளையாட்டுக்கு கடைசி இரண்டு வரிகளை நீக்கி வாசித்தேன். அப்பவும் நல்லா இருக்கு.

அனுஜன்யா
ஆசிரியர் அழகியசிங்கர் அவர்களுக்கு ,

தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு என் நன்றிகள் !
வடகரை வேலன்,

மிக்க நன்றி நண்பரே !

யாத்ரா,

உங்கள் வாழ்த்துக்கும் நன்றி !

அனுஜன்யா,

நீங்கள் சொல்வது சரிதான் தலைவரே. அதை நீக்கி வாசித்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. நன்றி !
நானும் வந்துவிட்டேன் மண்குதிரை.உள்ளேன் ஐயா சொல்வதற்காக மட்டுமல்ல.மனமாற வாழ்த்தவும். வாழ்த்துகள்.
நளன் said…
மிக‌ ந‌ன்று :)