Skip to main content

வெளிச்சம்

 அழகியசிங்கர்


காலையில்
சூரியனைப் பார்த்து
சிரம் தாழ்த்தி
வணங்கினேன்

ஒளியை
உலகத்துக்குத்
தந்தவன்

அவன்தான்
உலகத்தை ஆள்கிறான்
அவன்
கருணையால் நாமெல்லாம்

வெளிச்சம்
என்ற ஒன்றில்லாவிட்டால்
நாமெல்லாம்
ஒருவரைவொருவர்
பார்த்துக்
கொண்டிருக்க மாட்டோம்

உண்மையில்
இருட்டு குறைந்த
வெளிச்சம் 
See less



Comments

Comments