Skip to main content

புத்தகக் காட்சியை முன்னிட்டு தாறுமாறான கவிதைகள்



அழகியசிங்கர்




1.

புத்தகக் காட்சி ஓய்ந்து விட்டது
இன்னும் ஓயவில்லை
மனதிலிருந்து

2.

தனி இதழ் நன்கொடை விலை ரூ.20
என் நாவலின் பெயர்
விலை ரூ.20 தா என்று கேட்கிறார்கள்

3.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
வந்து விட்டேன்
வீடு முழுக்க புத்தகங்கள்

4.

நண்பர்கள் வந்தார்கள்
புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்
பின்
சிரித்தபடியே சென்று விட்டார்கள்

5.

எல்லாரும் வந்தார்கள்
எல்லாம் சரிதான்
ஆனால் நான் நினைத்தபடி
புத்தகங்கள் வாங்கவில்லை
6

புத்தகக் காட்சியில்
சில இடங்களைத்
தவிர்க்க நினைத்தேன்
ஆனால் முடியவில்லை
யூரின் போகுமிடத்தையும்
சாப்பாடு கூடத்தையும்

7.

இந்தப் புத்தகக் காட்சியில்
நாவல்களாக வாங்கிக் குவித்தேன்
என்னன்ன நாவல்கள் என்று கேட்டார்கள்
நான் சொல்லவில்லை

8.

புத்தகங்களை வாங்கியாயிற்று
எப்போது
என்று கேட்கிறார்கள்
அது
எப்போதும் குழப்பம்தான்

9.

வந்தார்கள்
வென்றார்கள்
சென்றார்கள்

10.

பொன்னியின் செல்வன் வத்தியதேவன்
குதிரையேறி
எல்லாக் கடைகளிலும்
இருக்கிறான்






 

Comments

Popular posts from this blog