Skip to main content

துளி : 30 - 108வது இதழ் விருட்சம் வந்துவிட்டது


அழகியசிங்கர்




ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன், விருட்சம் 108வது இதழ் கொண்டு வர வேண்டியதாக இருந்தது.  டிசம்பர்- ஜனவரி-பிப்ரவரி வர வேண்டிய இதழ்.  ஆனால் ஜனவரி புத்தகக் காட்சி படுத்தியப் பாட்டில் எந்தப் பத்திரிசையும் புத்தகமும் கொண்டு வர வேண்டாமென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் பிப்பரவரியில் வராமல் மார்ச்சு அல்லது ஏப்ரல் கூடப் போயிருக்கும்.  ஆனால் என் புதல்வனின் வற்புறுத்தலுக்கு இணங்க நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல வேண்டும்.  அதுவும் பிப்பரவரி மாதம் 27ஆம் தேதி கிளம்புகிறோம்.  பிப்பரவரி மாதம் விருட்சம் முடிக்காவிட்டால் இன்னும் ஆறுமாதம் தள்ளிப் போய்விடும்.  ஒரு தம் பிடித்து விருட்சம் 108வது இதழை பிப்பரவரி மாதமே கொண்டு வந்துவிட்டேன்.   இதோ எல்லோருக்கும் அனுப்பவும் தயாராகிவிட்டேன்.  108வது இதழில் இன்னொரு விசேஷம்.  மொத்தப் பக்கங்களும் 108.  பொதுவாக நான் 80 பக்கங்களுக்கு  மேல் பத்திரிகையைக் கொண்டு வர மாட்டேன்.  இந்த இதழை 108 பக்கங்கள் கொண்ட இதழாகக் கொண்டு வந்துவிட்டேன்.  வழக்கம்போல் யார்யார் எழுதியிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.


1. இளமையில் கல் - சிறுகதை- ஏ.ஏ.ஹெச்.கே. கோரி
2. ஞானக்கூத்தன் எழுதிய முன்னுரை     
3. கடிதங்கள்
4. சரஸ்வதம் - சிறுகதை - ஸிந்துஜா                           .   
5. புத்தக விமர்சனம் - டாக்டர் ஜெ பாஸ்கரன்
6. புத்தக விமர்சனம் - உஷாதீபன்      
7. பூனைப் பார்வை - கவிதை - ஜான்னவி
8. காதலர் தினம் என்றால் என்ன? - கவிதை-அழகியசிங்கர்
9. விடுதலை - சிறுகதை - ஐ கிருத்திகா
10. இரண்டு கவிதைகள் - ஷாஅ
11. புத்தக விமர்சனம் - சந்தியா நடராஜன்
12. புத்தக விமர்சனம் - அழகியசிங்கர்
13. மலை பூமியும் மனைச்சியும் - கட்டுரை - பெஷரா
14. இந்தச்சாலையில் இந்தத்தெருவில்- கவிதை-ராணிதிலக்   
15. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
16. சித்திரம் பேசேல் அல்லது  ஏதோ ஒரு தேசம் - சிறுகதை
-  (எ) சாய்நாத்         
17. பானுமதி கவிதைகள்  
18. மரம் - சிறுகதை - அழகியசிங்கர்       
19. உபா சுட் - சிறுகதை -சோ சுப்புராஜ்
20. துணை - சிறுகதை - டாக்டர் ஜெ.பாஸ்கரன்
21. பிரபஞ்சன் நினைவுகள் - தேவகோட்டை வா மூர்த்தி     
22. சாருகேசி - அஞ்சலி - டாக்டர் ஜெ பாஸ்கரன்
23. யோகாவைப் பற்றி சாருகேசி எழுதியது
24. உரையாடல்




நவீன விருட்சம் இதழைப் பெருமைப்படுத்திய படைப்பாளிகளுக்கு என் நன்றி உரித்தாகும்.  இந்த இதழின் அட்டைப் படம் கவிஞர் வைதீஸ்வரனின் கைவண்ணம்.  

Comments

Popular posts from this blog