Skip to main content

இரண்டு பூனைகள்




அழகியசிங்கர்




ஒரு கருப்புப் பூனை
நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
மியாவ் என்றது..

இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
கலந்த நிறத்தில்
நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
இரண்டு முறை கத்தியது

நான் பேசாமல் வந்து விட்டேன்.

Comments

Popular posts from this blog