Skip to main content

யாப்பியல்

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.  இதுவரை முதல் இதழில் வந்த கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  இப்போது இரண்டாவது இதழ்.

நவம்பர் 1970   -  இரண்டாவது இதழ்


மா. தக்ஷிணாமூர்த்தி


பூங்குயிலே,
யாப்பியல் கற்றனையோ நீ?
இசைக்கும் வசைக்கு -
மின்றியமையாத
'சை' கைகளைக் கற்றுக்கொள்.
இலக்கண மிதுவே.
இன்றே லிடையிற் படையாய்ப்
படுத்து விடுவாய்.
அது உன்பாடு.
என் பாடு
உன்னைப் பார்த்துக்
கா கா எனக் கரைதல்.
காவாக்கால் சோகாப்பா-
யிசையிழுக்குப் பட்டு.

Comments