Skip to main content

நாம் மனிதரைப் புரிந்து


ஆனந்தி வைத்யநாதன்


நாம் மனிதரைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நம்மை மனிதர் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நாம் சூழ்நிலைகளைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

சூழ்நிலை நம்மை ஏற்றுக்
கொள்ளா விட்டாலும்

நாம் உண்மையை உணர்ந்து
கொள்ளா விட்டாலும்

உண்மை நமக்குள் இறங்கி
தெளிந்து கொள்ளா விட்டாலும்

நாம் பிறர் அன்பைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

பிறர் அன்பு நம்மை இழுத்துக்
கொள்ளா விட்டாலும்

தானாய் வந்த வம்பை நாம்
அறிந்து கொள்ளா விட்டாலும்

நாமாய் தேடி வம்பு புரிய
மனம் கொள்ளா விட்டாலும்

விழுந்து,விழுந்து செய்த செயல்கள்
ஏற்றுக் கொள்ளா விட்டாலும்

செய்த செயல்கள் பின் நன்மை தருமென
தெரிந்து கொள்ளா விட்டாலும்...

Comments

ஹா... ஹா... சிரமம் தான்...

Popular posts from this blog