Skip to main content

மிச்சம்


 
                
                மரம்போல் நிற்காதே
                மனம் திறந்து
                பதிலைச் சொல்லென்றேன்
                
                மனிதனைப்போல
                மலிவானவையல்ல மரங்கள்
                
                தேக்கின்விலை மனிதனுக்கில்லை
                சந்தனமணமும்
               
                மழை, வெய்யில்,  பனி, புயல்
                எதுவானாலும் எதிர்கொள்ளும் மரங்கள்
                
                 குடையில் குளிரறையில்
                கம்பளியில் ஒளிவான் மனிதன்
               
                தழையும் நிழலும் தந்தாலும்
                ஆடுகளைத் தின்னாது மரங்கள்
                மனிதன் தின்பான்
               
                மரத்தை வெட்டினால்
                கட்டில் தொட்டில் கதவு ஐன்னல்
                மேசை நாற்காலி செய்யலாம்
               
                மிச்சத்தை
                நீயே யோசித்துக்கொள்ளென்றான்
 
       

Comments

இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Popular posts from this blog