Skip to main content
இனி அப்பா இல்லை...


அழகியசிங்கர்


அப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமல் இருந்தார். கன்னத்தில் லேசாக தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி கொடுத்தேன். திரும்பவும் அப்பா கண்ணை முழிக்கவில்லை. லேசாகத் தட்டினேன். கையை உயரத் தூக்கினேன். லேசாக முணுமுணுத்தார். பின் கஞ்சியைக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

புத்தகக் காட்சி ஒட்டி ஒரு விவாதம் எனக்கும் மனைவிக்கும் நடந்தது. üஅப்பா சரியாயில்லை. நீங்கள் இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்க வேண்டும்,ýý என்று. நானும் சரி சரி என்றேன். 

ஆனால் மனதிற்குள் அப்பா புத்தகக் காட்சி வரை இருப்பார் என்றுதான் நினைத்தேன். அவர் படுத்தப் படுக்கையாக ஒரு வருடமாக இருந்து கொண்டிருந்தார். 
இரவு நேரங்களில் அவர் சத்தம் போடுவார். நான் ஓடிப்போய் அவர் கையைப் பிடித்துக்கொள்வேள். üபயமாய் இருக்கிறதடாý என்பார். நான் பயப்படாதே என்பேன். ஆனால் நான்தான் உண்மையில் பயந்தவன். என் அப்பா ஒரு தைரியமான மனிதர். பலகுமாரன் என்ற எழுத்தாளர் அவர் அம்மாவிற்கு ஒரு பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் நானும் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.

என் அப்பா நல்ல மாதிரி. அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அவருடைய ஆசைகள் குறைவானவை. மிகவும் சாதாரண விஷயங்களில் திருப்தி அடைந்து விடுவார்.

அப்பாவிடம் கேட்டேன் ஒருநாள் : üரமண மகரிஷியைப் பார்த்திருக்கிறாயா?ý என்று. இல்லை என்று சொன்னார். அவருக்கு அதெலர்லாம் தோன்றவில்லை. அவர் ரொம்ப படித்தவர் இல்லை. ஆனால் அவர் ஒரு முறை க நா சு நாவல்கள் போரடிக்கும். படிக்க முடியாது என்று சொன்னது ஆச்சரியம். ஞானக்கூத்தனி; பென்சில் படங்கள் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது அதில் உள்ள கவிதைகளைப் படித்து அவரிடமே ரசித்துச் சொல்வார்.

நான் தடிதடியாய் புத்தகம் வைத்திருப்பேன். எடுத்துப் படிக்க எனக்கு மனசு வராது. அப்பா எடுத்துப் படித்து விடுவார். ஒரு முறை அசோகமித்திரன் கதைகள் எல்லாவற்றையும் அவர் படித்து விட்டார். எனக்கு ஆச்சரியம். எதாவது ஒரு கதை சொல்லுப்பா என்றால் சொல்ல மாட்டார். தி ஜானகிராமன் கதைகளையும படிதது விட்டார். நான் எழுதும் என் படைப்புகளை அப்பாவிடம் காட்டுவேன். ஒரு முறை அப்பாவைப் பற்றியே ஒரு கதை எழுதினேன். அவருக்குப் பிடிக்கவில்லை. üஎன்ன எழுதியிருக்கே.ý என்று திட்டவும் செய்தார். அன்றிலிருந்து நான் எதாவது எழுதினால் தானாகவே விரும்பிப் படிக்க மாட்டார். நான் படிக்கச் சொல்லி கெஞ்சனும். 

நான் முட்டாள்தனமாய் பதவி உயர்வுப் பெற்று சென்னையை விட்டுப் போனவுடன், அப்பாவிற்கு வருத்தமாகி விட்டது. அவர் எங்கள் வங்கி தலைவருக்கு தமிழில் நாலைந்து பக்கங்கள் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார். 
யாராவது அப்பா தன் பையன் மாற்றல் பெற்று திரும்பவும் சென்னைக்கு வரவேண்டுமென்று கெஞ்சி கடிதம் எழுதுவார்களா? என் அப்பா அதைச் செய்தார். என்னடா இது இப்படி தவிக்க வைத்துவிட்டு வந்து விட்டேனே என்று எனக்குத் தோன்றும். 

ரிட்டையர்டு ஆவதற்கு முன் இரண்டு வருடம் நான் சென்னைக்கு வந்து விட்டேன். அப்பவும் அப்பா விடவில்லை. மேற்கு மாம்பலத்திலேயே ஒரு கிளை அலுவலகத்தில் என்னை மாற்றும்படி கடிதம் எழுதுவார். எனக்கு இவர் இதுமாதிரி செய்கிறாரே என்று எனக்குத் தெரியாது. அப்பாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்ட. 
2014ஆம் ஆண்டு நான் ரிட்டையர்டு ஆகி வந்தபிறகு அப்பாவுடன் நான் முழுக்க முழுக்க இருந்தேன். நானும் வீட்டிலே இருக்கேன்..நீங்களும் இருக்கீங்க.. என்பேன். 
அப்பா முதல் அறையிலிருந்து கடைசி அறை வரை அடிக்கடி சென்று கொண்டிருப்பார். நான் கிண்டல் செய்வேன். இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போகிறியா அப்பா என்று. என் எழுத்தாள நண்பர்கள் பலரிடம் அவர் ஹோமிபோதி மருந்துகளைப் பற்றி சொல்லி போர் அடிப்பார். ஓரு முறை புத்தக ஸ்டாலிற்கு வந்திருந்து என் ஸ்டாலைப் பார்த்துக் கொண்டிருந்தாரட.

போன ஆண்டு ஜøன் மாதம் பிறகு அவரால் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை. ஆட்கள் வைத்து அவரைப் பார்த்துக்கொண்டோம். அவருக்கு தன் இயலாமை குறித்து வருத்தம். அப்பா ராத்திரி முழுவதும் தூங்காமல் கத்திக்கொண்டே இருப்பார். அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் கைகளைப் பற்றிக்கொள்வேன். என் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொள்வார். அப்பா படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்துக்கொள்வேன். 

நேற்று (05.01.2017) அப்பா இறந்து விட்டார். இரவு 9 மணிக்கு. என்னால் இனிமேல் அவர் படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் படுக்க முடியாது. .




Comments