Skip to main content

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து

அழகியசிங்கர் 



2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத் தொகுதியை  அசோகமித்திரன் வெளியிட அதை ஞானக்கூத்தன் பெற்றுக் கொள்கிறார்.  அன்று என் ஸ்டாலில் ஏகப்பட்ட கூட்டம்.  சா கந்தசாமி, நாஞ்சில்நாடன், மலர் மன்னன், க்ருஷாங்கினி, ஆர் ராஜகோபாலன், அம்ஷன்குமார் என்று பல இலக்கிய நண்பர்கள் வந்திருந்தார்கள்.  ஒரு பிரதியை என் மனைவியின் சகோதரி பெற்றுக்கொண்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து புத்தகக் காட்சியில் பெருந்தேவியின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்ள பலரை அழைத்துள்ளேன்.  

இன்று மாலை 6.30 மணிக்கு அழுக்கு சாக்ஸ் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு ஸ்டால் 594-ல் நாம் திரும்பவும் சந்திக்கிறோம்.

Comments