Skip to main content

குருவும் சிஷ்யனும்

நவம்பர் 1970   -  கசடதபற இரண்டாவது இதழ்



க. நா. சுப்ரமண்யம்


கை நீட்டித் தலையில் வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
நஇடத்தமர்ந்த சிஷ்யனை
'விளங்கிற்றா?'
என்று குரு வினவ'விளங்கிற்று'
என்று சிஷ்யன்கூற
'என்ன விளங்கிற்று
எனக்கும் சொல் '
என்று சகபாடி கேட்டான்
'குருவே சொல்வார்'
என்று பதில் வந்தது.

Comments