Skip to main content
 வீடு


வந்த நாளிலிருந்து இந்த வீட்டில்
நான்கு அறைகளிலிருந்தன
இரண்டு கூடங்கள் பெரிதாக இருந்தன
சமையல் செய்ய தாராளமான இடம்
முகம் கழுவ பாத்ரூம் போக என
பலருக்கும் இடங்கள் பரந்து வீற்றிருந்தன
தேவையான நீர் எல்லோருக்கும் கிடைத்தது.
தெரு முனையில்
கடையில் எல்லாம் கிடைத்தன
நின்றால் பஸ் எளிதாக வர
பஸ் ஸடாண்டுகள்
சில நாட்கள் மட்டும் வீட்டில்
கூட்டம் நிரம்பி வழிந்தன

ஒவ்வொருவராய்ப் போக கூட்டம்
இல்லாமல்

இருக்க வேண்டியவர்கள் மட்டும் இருந்தார்கள்.
கூடத்தில் கலகலவென்று பேசிய
பேச்சுக் குரல்கள் முற்றிலும்
அடங்கி விட்டன.

இப்போது வீட்டில்

நானும் வீடும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.


அழகியசிங்கர்.

Comments

நல்ல வரிகள்...

தனிமையின் வேதனையை உணர்த்துகிறது...

நன்றி...