Skip to main content

துலக்கம்


காரின்

சடசடத்த மழைச் சத்தம்

பச்சையின்

சலசலக்கும் பயிரொலி

மஞ்சளின்

சரசரத்த ஒளி வார்த்தை

நீலத்தின்

பரபரக்கும் சிறகோசை

வெண்மையின்

சப்தமற்ற சப்தம்...

இனி தோன்றுவதை

நீங்கள் எழுத.............................

இப்படி மட்டும்

சொல்கிறது கவிதை.

நிறங்களுக்கு

சப்தங்கள் போல்

பிரதிக்கு

வடிவங்கள்...

வாசிப்பிற்கே

விரிந்த சிறகுகள்.

Comments