Skip to main content

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்

நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்


அழகியசிங்கர் 




நவீன விருட்சம் 100வது இதழுக்கான கூட்டம் ஒன்றை மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி ஹாலில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று மாலை 6 மணிக்கு.  இது குறித்து விபரங்கள் இன்னும் சில தினங்களில் அளிக்கிறேன்.

நவீன விருட்சம் 100ல் பங்குகொண்ட படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் கூடிய விபரத்ததை இங்கு தருகிறேன்.

1. பெருந்தேவி கவிதைகள்
2. கா ந கல்யாணசுந்தரம் - என் கிராமத்து சுமைதாங்கி கல்
3. வேல் கண்ணன் கவிதைகள்
4. மறதியின் பயன்கள் - ஞானக்கூத்தன்
5. தூரம் - சிறுகதை - ஜெயந்தி சங்கர்
6. பொன் தனசேகரன் கவிதைகள்
7. நடப்பியல் - நீல பத்மநாபன்
8. அம்ஷன் குமார் கட்டுரை
9. அகலிகைப் படலம் - போயோன்
10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம்
11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் 
12. ரோஸ் ஆன்றா கவிதைகள்
13. தமிழவன் சிறுகதை - காந்தி லிபி
14. ராமலக்ஷ்மி கவிதைகள்
15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள்
16. தொடாத பூ - ந பெரியசாமி
17. சௌந்திரத்தின் ரோஜாப் பூ - ஸிந்துஜா
18. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
19. காந்தி வாழ்க்கை - கட்டுரை - பிரபு மயிலாடுதுறை
20. அழகியசிங்கர் கவிதைகள்
21. ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு - கவிதை
22. சாந்தி மாரியப்பன் கவிதை 
23. வைதீஸ்வரனும் நானும் - அசோகமித்திரன் 
24. வைக்கோல் கிராமம் - இலா முருகன்
25. தற்காலிகம் - கவிதை - சத்யானந்தன்
26. டபுள் டக்கர் - அழகியசிங்கர்
27. வரைதலும் பேசுதலும் - அ மலைச்சாமி
28. ரசிகன் - ந கிருஷ்ணமூர்த்தி
29. பிரதாப ருத்ரன் கவிதைகள்
29. பேயோன் கவிதைகள்
30. எஸ் வி வேணுகோபாலன் கட்டுரை
31. எனக்கு படம் வரைய வராது - புலியூர் அனந்து
32. வே நி சூர்யா - கடிகாரம் சொன்ன கதை
33. எங்கே அவன் ? - வைதீஸ்வரன் கவிதை
34. காத்திருக்கும் சூரியன் - தெலுங்கு கதை தமிழில் 
35. கடற்கரைக் காற்று பலமாக வீசுகிறது - ஷாஅ
36. சிறகா கவிதைகள்
37. புதிய கானம் - ஆனந்த்
38. முதுவேனில் - எஸ் சங்கரநாராயணன்
39. ஒரு தவறு செய்தால் - சுந்தரராஜன்
40. இயங்கியல் - ச.விஷ்ணுதாசன்
41. ஐ சி யூ - அதுல் பிஸ்வாஸ்
42. ஸ்ரீதர் - சாமா கட்டுரை
43. நெருப்புப் பூச்சி - பானுமதி ந
44. நெனப்பு - கலைச்செல்வி
45. பிலிம் நியூஸ் ஆனந்தன் - அம்ஷன் குமார்
46. புகை - பானுமதி ந
47. அந்த போட்டோவில் - ஜெ ரகுநாதன்
48. ஜெமினி அருகில் இழந்த சொர்க்கம் - மாதவபூவராக
மூர்த்தி
49.நந்தாகுமாரன் கவிதைகள்
50. லாவண்யா சுந்தராஜன் கவிதைகள் குறித்து ஆனந்த் கட்டுரை
51. மரணத்தின் கண்ணாடி - 3 - க்ருஷாங்கினி
52. ஆர் ராஜகோபாலன் கவிதைகள் 
53. அபராஜிதா கவிதைகள் 
54. லாவண்யா கவிதைகள்
55. அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள் 
56. புதுமைப்பித்தனின் காஞ்சனை - பெருந்தேவி 
57.இலவசம்தானே - ஜெ பாஸ்கரன்
58. ஜான்னவி கவிதைகள் 

இதில் கலந்து கொண்ட படைப்பாளிகள் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வர முயற்சி செய்யவும்.  படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை  navina.virutcham@gmail.com     அனுப்பவும். உடனே பத்திரிகையை அனுப்புகிறேன். 

ஒத்துழைப்பு அளித்த எழுத்தாளர்களுக்கு நன்றி.  என்னைப் பொறுத்தவரை ரொம்பவும் திருப்தியான இதழ் இது.  இதை விட பிரமாதமாக நான் ஒரு விருட்சத்தைக் கொண்டு வர முடியாது.  பல புதியவர்கள் இதில் எழுதி உள்ளார்கள்.  அவர்களுக்கு என் நன்றி. 260 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் விலை ரூ.100 தான்.

இந்த இதழில் நடேஷ் அவர்களின் ஓவியங்களையும், கசடதபற இதழ்களில் வெளிவந்த ஓவியங்களையும் பயன்படுத்தி உள்ளேன்.  ஓவியர்களுக்கு என் நன்றி. 



Comments

Popular posts from this blog