Skip to main content

Posts

சில துளிகள்.......2

அழகியசிங்கர்  ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.  எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.                                                                                           ********* அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய 'நானும் அசோகமித்திரனும்' என்ற கட்டுரை  வெளிவந்துள்ளது.  ரொம்பநாட்கள் கழித்து நான் எழுதிய திருப்திகரமான கட்டுரை இது.  தடம் வாங்கிப் படியுங்கள்.                                                       ...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 27

அழகியசிங்கர்   போகன் சங்கர் கவிதை முத்தம் செய்வதெப்படி எனக் கேட்ட முதிரா முலைப் பெண்ணே... முத்தத்தைப் பலவகைகளில் செய்யலாம் தெய்வத்தைத் தொழுவதைப் போல பக்தியுடன் சிலர் செய்வார் பழம் சாப்பிடுவது போல பசியுடன் சிலர் செய்வார் பட்டாம்பூச்சி பிடிப்பது போல் பயத்துடன் சிலர் செய்வார் முள்கரண்டியில் இறைச்சியைக் குத்துவது போல இன்னும் சிலர் செய்வார் நான் எப்போதும் முத்தத்தை யுத்தத்தைப் போலதான் செய்வேன் நன்றி : எரிவதும் அணைவதும் ஒன்றே - கவிதைகள் - போகன் சங்கர் - பக்கம் : 112 - விலை : ரூ.90 - சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை 600 083, தொலைபேசி : 044-24896979 

விருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 8

அழகியசிங்கர் வழக்கம்போல எட்டாவது கூட்டம் இது.  என் நண்பர் பெ சு மணி நாங்கள் இருந்த போஸ்டல் காலனி முதல் தெருவின் எதிரிலுள்ள ராமகிருஷ்ணபுரம் 2வது தெருவில் வசித்து வருகிறார்.  ஒவ்வொரு முறையும் தெருவில் நடந்து செல்லும்போது அவரைச் சந்திப்பது வழக்கம். இப்படி ஒவ்வொரு விழாக்கிழமையும் பலரைச் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டுமென்பது அடியேனின் விருப்பம்.  இதை எத்தனைப் பேர்கள் ரசிப்பார்கள் என்பது தெரியாது.  இதை இன்னும் கொஞ்சம் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும்.  இப்போதுதான் இது புரிய வருகிறது. https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs&authuser=0 https://www.youtube.com/watch? v=Wwzk5ADv8qs

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 26

அழகியசிங்கர்   தெரிதல் புரிதல் பிரம்மராஜன் நான் எழுதிக்கொண்டிருப்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதை எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருப்பதாக எழுதுவதை எழுதுகிறேன். எழுதுவதை எழுதுகிறேன் என்று எழுதிக்கொண்டிருப்பதை எழுதுகிறேன். எழுதுவதால் எழுதுகிறேன். தெரிகிறேன் என்பதால் பார்க்கிறாய் பார்ப்பவன் பார்க்கப்படுகிறான் தெரிகிறதா கேட்கப்படுபவன் கேள்வியாக தெரிபவன் தெரிதலாக புரிபவன் புரிதலாக பூப்பவன் புதிராக அடுக்கடுக்காய் அதிர்ச்சியாக சிந்திப்பவன் சிக்கலாக சிற்பி உளியாக ஓவியன் காணுதலாக சிக்கல் சிரமமாக சிரமம் சிந்தனையாக சுடர் சாம்பலாக சாம்பல் உன் எலும்பாக பாஸ்பரஸ் பகற்கனவாக பகற்கனவு பதியன் பூவாக பூத்தது புதிராக புரியாதாய் புதிய புத்தம் கவிதையாய் அடுக்கடுக்காய் அணூ அணுவாய் அலையில் அலையில் தழுவித் தழுவி கழுவிக் கரைந்த உடலாக கரைமீது கால். நன்றி : ஞாபகச்சிற்பம் - கவிதைகள் - பிரம்மராஜன் - பக் : 64 - முதல் பதிப்பு : ஜøன் 1988 - விலை ரூ.12 - தன்யா - பிரம்மா பதிப்பகம், பர்ன் வூயு, குன்னூர் தெரு, ஊட்டி 643 001 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 25

அழகியசிங்கர்                       பெண்பாற் கூற்று சுகிர்தராணி வெகுதூரம் ஓடிய விலங்கொன்றின் உலர்நாவென தரையோடு வற்றிவிட்டது உறைகிணறு ஒற்றை உடலோடு உறங்குமிந்த இரவு உவப்பாக இல்லை என் பாதிப் புன்னகைக்குப் பின்னே சொல்லப்படாத கதையொன்று இருக்கிறது அவனை மிகவும் விரும்புகிறேன் சீராக நறுக்கப்படாத அவன் மீசையையும் என் கவிதைகளைச் சிலாகிக்கிறீர்கள் குழந்தைகள்மீது பெருவிருப்பம் எனக்கு ஆயினும் கருத்தரிக்க இயலாது கூந்தலை வெட்டிக் கொள்கிறேன் உதட்டில் ஊறும் முத்தங்களை அவ்வப்பொழுது உமிழ்ந்து விடுகிறேன் வேறென்ன செய்ய இறந்து போன அப்பாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது சிறுமிகளுக்கு மாலை நேர வகுப்பெடுக்கிறேன் கள்ளக்காதல் என்னும் சொல்லின் பின்னுள்ள வலி புரிகிறது இந்தக் கவிதையில் மர்மங்கள் எவையுமில்லை அகழ்ந்தெடுத்தல் புராதனச் சோதனை எவையும் வேண்டாம் வேண்டுமானால் என்னை ஒழுக்கங்கெட்டவள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் நன்றி : இப்படிக்கு ஏவாள் - கவிதைகள் - சுகிர்தராணி - விலை ரூ.75 - பக் : 72 - முதல் பதிப்பு : மே 2016 - ...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 24

அழகியசிங்கர்  தூர்  நா முத்துக்குமார் வேப்பம்பூ மிதக்கும் எங்கள் வீட்டுக் கிணற்றில் தூர் வாரும் உற்சவம் வருடத்திற்கொரு முறை விசேஷமாய் நடக்கும். ஆழ்நீருக்குள் அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும். கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி, கட்டையோடு உள்விழுந்த துருப்பிடித்த ராட்டினம் வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர், சேற்றிற்குள் கிளறி எடுப்போம் நிறையவே. சேறுடா...சேறுடாவெபன அம்மா அதட்டுவாள் என்றாலும் சந்தோஷம் கலைக்க யாருக்கு மனம் வரும்? பகை வென்ற வீரனாய் தலைநீர் சொட்டச் சொட்ட அப்பா மேல் வருவார். இன்றுவரை அம்மா கதவுகளின் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள். கடைசிவரை அப்பாவும் மறந்தே போனார் மனசுக்குள் தூரெடுக்க நன்றி :  பட்டம்பூச்சி விற்பவன் - கவிதைகள் - நா முத்துக்குமார் - முதல் பதிப்பு : டிசம்பர் 1997 - விற்பனை உரிமை : ப திருநாவுக்கரசு, 31/48  இராணி அண்ணா நகர், கலைஞர் நகர், சென்னை 600 078 - விலை ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 23

அழகியசிங்கர்   நிலவும் நிலவுகளும் தேவதச்சன் எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல பேரூரும் அல்ல எங்களூரில் நான்கு கிணறுகள் மூன்று ஊருணிகள் ஒவ்வொரு இரவும் எங்களூரில் ஏழு நிலவுகள் வந்து அழகு கொள்ளை கொள்ளும் தண்ணீரில் கல் எறிந்து ஒரே நிலவை ஆயிரம் நிலவாய் ஆக்குவோம் நாங்கள் சிறார்கள். வெறுமனே பொறுமை காத்து ஆயிரம் நிலவுகள் ஒரே நிலவாய் கலப்பதை பார்ப்பார்கள் பெரியவர்கள் இப்போது ஊருணியை பஸ் நிலையங்கள் ஆக்கிவிட்டார்கள்.  மேலும் கிணற்றை மூடி குப்பைத்தொட்டியாக மாற்றி விட்டார்கள். இப்போது தனியான ஒரு நிலவு எங்கள் ஊர் மேலாகப் போய்க்கொண்டிருக்கிறது நன்றி : எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது - கவிதைகள் - தேவதச்சன் - பக்கம் : 64 - விலை : ரூ. 40 - உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை  600 018 - தொ பேசி : 91-44-24993448