Skip to main content

Posts

எதையாவது சொல்லட்டுமா............84

அழகியசிங்கர் எங்கள் அலுவலகத்தில் மதியம் ஒன்றிலிருந்து, இரண்டு மணிவரை உணவு அருந்தப் போவோம்.  உண்மையில் அரைமணி நேரம்தான் உணவு இடைவெளி.  நாங்கள் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்வோம். இப்போது பிரபலமாக இருக்கும் யோகா வகுப்பில் என் அலுவலக நண்பர் என்னையும் சேர்த்துவிட்டார்.  நான் சொல்லும் இந்தக் கதை பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்தது. நான் யோகா கற்றுக்கொண்டு விட்டேன் என்ற கர்வத்தில் இருந்தேன்.  மதியம் சாப்பிடுவதற்கு முன் சூன்ய தியானத்தை ஆரம்பிக்க வேண்டும்.  ஒரு இடத்தில் கண்ணை மூடிக்கொண்டு கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு உட்கார வேண்டும்.  பின் எந்த யோசனையும் இல்லாமல் இருக்க வேண்டும்.  வெளியில் நடக்கும் எந்தச் சப்தமும், அசைவும் மனதில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அதுதான் சூன்ய தியானம்.  கண்ணை மூடியவுடன் தத்ரூபமாய் ஆழ்ந்த யோக நிலையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அலுவலகக் கட்டடத்தில் மூலையில் நான் கற்றுக்கொண்ட புதியதில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன்.  பெரும்பாலும் யாரும் என்னைப் பார்க்க முடியாத இடத்தில்தான் உட்கார்ந்த...

ஐராவதம் பக்கங்கள்

முடியாத யாத்திரை - காசியபன் - கவிதைகள் - விலை ரு.60 - பக்கம் 63 - வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 ராஜாஜி ஒருமுறை குறிப்பிட்டார்.  'நாற்பது வயதுக்கு மேற்பட்ட வர்கள்தான் இலக்கியம் படைக்க வேண்டும்' என்று.  இலக்கியத்தில் முதிர்ச்சி காணக்கிடைக்கும் என்பது அவர் எண்ணம்.  அப்படிப் பார்த்தால் கீட்ஸ், பைரன், ஷெல்லி எழுதியதெல்லாம் செல்லாது. காசியபன் ராஜாஜியின் ஆவலை நிறைவேற்றியிருக்கிறார்.  தன்னுடைய 53வது வயதில்தான் எழுதத் துவங்கியுள்ளார்.  இவருடைய முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியைக் காண நேர்ந்தது. நானோ? நீ? நீ யாரடா? தீப்பொறி யொன்று உள்ளில் எழ தேடத் தொடங்கினேன். பிரபஞ்சத்தைப் பார்த்து பாடினேன். கபடங்கள் அசட்டுத்தனங்கள்  அதிகாரக் கிரகங்களின் சுற்றல்கள் சிக்கி நாம் அவதிப்படும் வியூகங்கள் வழியாகத் தேடினேன். இதெல்லாம் ஒரு தப்பித்தல் என்று சொல்கிறது மனசு. நான் இதை  திரேபி  என்பேன்.  கவிதை ஒரு திரேபி.  நாடகத்தில் நடிப்பது ஒரு திரேபி.  பாட...

ஐராவதம் பக்கங்கள்

இலக்கியத்தின் முதுமை எனக்கு இப்போது அறுபதைந்து வயதாகிறது.  வங்கியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.  தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் என்னைவிட முதியவர்களைத்தான் எதிர்கொள்கிறேன்.  வாலிபர்களும், யுவதிகளும் சைக்கிள், ஸ்கூட்டர் மோட்டார்கார் முதலிய வாகனங்களில் பயணிக்கிறார்களோ என்னவோ? சமீபத்தில் எழுபத்தோரு வயது நிரம்பிய ஒரு நண்பரை தற்செயலாக சந்தித்தேன்.  அந்தக் காலத்தில் தீபம், கணையாழி முதலிய இலக்கிய பத்திரிகைகளின் வாசகர்.  காஞ்சிபுரம் நகரத்துக்காரர்.  புனேயில் ராணுவ கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்று கணிசமான ஓய்வூதியம் பெறுபவர்.  மாம்பலம் ஒட்டியுள்ள அசோக்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சொந்தக்காரர்.  மனைவியுடன் வசித்து வருகிறார்.           இவருக்கு இரு மகன்கள்.  இருவரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று விட்டார்கள்.  இந்தியாவிற்கு திரும்பி வரும் உத்தேசமில்லை.  நண்பர் ...

நவீன தோட்டிகள்

விஜய நந்தன பெரேரா   தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்   ' இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்' கூரிய பார்வைகளும் குற்றச்சாட்டுகளும் குத்தும் ஊசிமுனைகளும் முடிவற்றவை   தலைக்கு மேலே சூரியனும் நோயுற்ற தீக் காற்றும் கொதிக்கச் செய்கிறது குருதியை. பரம்பரை வழித் திண்ணையும் செந்தணலாய்ச் சுடுகிறது.   காகங்கள் வரிசையாக எச்சமிடுகின்றன எச்சங்களை விற்றும் பிழைப்பவர்கள் 'இங்கும் அதே தமிழன்தான் அங்கும் இதே தமிழன்தான்' என்கின்றனர்.   -  

திரும்பவும்...

அழகியசிங்கர் ஏதோ ஒரு சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது நாம் ஆரம்பித்த இடத்தில் வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது நமக்குப் பதில் நம் புத்திரர்கள் தொடர்கிறார்கள் அவர்களும் நம்மைப் போல் வியர்வைச் சிந்துகிறார்கள் சம்பாதிக்க எங்கோ ஓட்டமாக ஓடுகிறாரகள் ஒரே குரலில் சத்தம் போடுகிறார்கள் மகிழ்ச்சியை நம்மைப்போல் அனுபவிக்கிறார்கள் நமக்கு ஏற்பட்ட துன்பமும் துயரமும் அவர்களிடமும் தொடர்கின்றன எதைப் பற்றியும் கவலைப்படாமல் எஞ்சிய வருடங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம் நாம் எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம் சுழற்சி திரும்பவும்....                           (19.04.2013)

புதையல்

குமரி எஸ். நீலகண்டன் சிறு வயதில் அங்கே புதையல் கிடைத்தது. இங்கே புதையல் இருக்கும் என்றெல்லாம் அன்றைய பெரியவர்கள் கதைத்த போதெல்லாம் நான் நம்பவே இல்லை... சாலையோர சாக்கடைகளை செப்பனிடுவதற்கு கோடையே சரியானத் தருணமென முன்பு போட்ட அதன் காங்கிரீட்டுகளை உடைத்தார்கள். இயந்திர துளைப்பான்களால் தூள் கிளப்பினர் காற்று வெளியெங்கும்... சிறுமலை போல் குவிந்தன தோண்டிய மண்களோடு உடைந்த காங்கிரீட் துண்டுகளும் பாதசாரிகள் வழுக்கியும் சறுக்கியும் மலை ஏறி இறங்கி மயானத்திற்கு பக்கம் சென்று வந்தனர்... சாக்கடையை மூடுவதற்கு கனம் கூடிய காங்கிரீட் பாளங்கள் வந்து இறங்கின... திறந்த சாக்கடைக்குள் தோண்டிய மண்கள் விழுந்தன.... அந்தப் புதையலை காங்கிரீட் பாளங்களால் மூடினார்கள்... அகத்திலிருப்பவை தெரியாத அளவிற்கு அழகாகவே மூடினார்கள் ஒப்பந்தம் போல். அடுத்த ஒப்பந்தத்திற்கான புதையல் உள்ளே மூடப் பட்டிருக்கிறது... புதையல் புதையல் என்கிறார்களே அதை இப்போது நான் நம்புகிறேன்... ஊழல் ஊழல் ...

வெயில் கவிதை

ரவிஉதயன் முதல் வரியிலிருந்து கடைசிக்கு முந்தின வரிவரைக்கும் ஒரே வெயில்... ஒரே அனல்... ஒரே சூடு... கடைசி வரிக்கடியில் ஒரு எறும்புநிழல் அதில் இளைப்பாறுகிறேன்.