முன்னர் அவள் அனுப்பியவை நீண்ட கடிதங்களுடன் காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும் செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும் புகைப்படங்களில் பனி நிறைந்த சோலைகளில் ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள் அனைத்து மடல்களிலும் ஆங்கில வகுப்பினைக் குறித்தும் குளிர்தினங்களில் நீச்சலை விரும்பாத குளத்தின் தங்க மீன்களைப் பற்றியுமே எழுதியிருந்தாள் காலம் செல்லச் செல்ல தற்பொழுது என்றாவது வருகிறது கடிதம் அதே இடம்தான் இது பெரிய கட்டிடத்தின் அடியில் வீட்டுக் குருவிப் பார்வையோடு அவளிருக்கும் இப் புகைப்படம் இப்பொழுதுதான் வந்தது எனக்கு 'நித்திரையேயில்லை இரவில் புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்ன செய்ய வேண்டும்?' புகைப்படத்தின் பின்னால் அவளது உடைந்த கையெழுத்து மூலம் - இஸுரு சாமர சோமவீர