Skip to main content

Posts

Showing posts with the label த.அரவிந்தன்

கீறல் பெயர்கள்

கருவேலம் மரத்தில் காலம் தள்ளும் கீறப்பட்ட அந்தப் பெயர்களுக்குள் சமீபமாய் பல பிணக்குகள் பிசினை வழித்து கீழே தள்ளுவது யார் வேலை? கட்டெறும்புகள் மேலேறி வர யார் காரணம்? கோடை தொடங்குவதற்குள்ளே இலையுதிர்க்க யார் காரணம்? காக்கா முட்டையை பச்சப் பாம்புக்கு காட்டிக் கொடுத்தது ஏன்? தேனடை கட்ட அனுமதிக்காதது ஏன்? உச்சிக் கிளை முள்ளைப் பிடித்து தொங்கியவாறே கீழே குதித்துவிடப் போவதாக நேற்று மதியம் 'ள்' பெயர் மிரட்ட குதிக்காதே...குதிக்காதே என 'ன்' பெயர் கெஞ்சிய பிணக்கு 'உன் சொந்தக்காரப் பசுக்களுக்கு பழுத்த கருவேலங் காய்களை அதிகமாய் பறித்துப் போட்டாய் என் பசுக்களுக்குப் போடவே இல்லை.'

வெயிலை உலர்த்தும் இரவு

பகல் வெளியில் பயணிக்கையில் கிரகிக்கும் வெயிலையெல்லாம் குவித்து வைக்கோல்போராய் வைத்துக்கொள்வான் இரவு படுக்கையில் போரின் மையத்திலிருந்து கொத்துக்கொத்தாகப் பிய்த்து உதறி, பரப்பி மேலே படுத்துருண்டவாறு வேக வட்டமடிப்பான் ஈரமுள்ள வெயில் பக்கம் சொணை சுள்ளெனடிக்க அதிகச் சுற்றடிப்பான் நள்ளிரவு சோர்கையில் உலர்த்திய வெயிலைக் குவித்துக் கட்டி உறங்கப் போவான்.

இரு கவிதைகள்

எல்லாம் காற்றுவாழ்வனவே... காற்றின் நுண் ஆய்வாளனெனக் கைகுலுக்கியவன் தோள் மாட்டி பை முழுவதும் எண்ணிறாத பறவைகளின் வண்ணவண்ண இறக்கைகள் பறந்தன காற்றில் ஒற்றையில் அலைந்து இறக்கை எழுதும் குறிப்புகள் சுவாரஸ்யமானவை என்றவன் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் என்று கண்டறிந்ததாய்ச் சொன்னவை: தாமரைக்கொடியின் காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் அதிகம் ருசிக்கும் வேப்ப மரக்காற்றைச் சுவாசித்து உறங்கினால் தீரா நோயனைத்தும் திரும்பிப் பாராமல் நடை கட்டும் ஆலமரக் காற்றைச் சுவாசித்து உறங்கினால் ஆயுள் கொடுக்கும் செல்கள் வீர்யம் கொள்ளும் அரச மரத்துக் காற்றால் மூளையின் அறைகளில் புது ஊட்டம் பிறக்கும் அழகிய பெண் சுவாசித்தைச் சுவாசித்த மரம் அதீதமாய்ப் பூத்துக் குலுங்கும் மரங்களில் முட்கள் முளைப்பதற்கு முரடர்கள் சுவாசக் காற்றே காரணம் பூச்செடி, கொடிகளில் முட்கள் முளைப்பதற்கு முரட்டுப்பெண்ணின் சுவாசம் காரணம் சற்று நிறுத்தியவன் தொடர்ந்து சொன்னவை: பறத்தல் எனும் வினை தேர்ந்த கண்கட்டு வித்தை காற்றின் ஆழத்தில் எல்லாமே மூழ்கிக் கிடக்கின்றன எல்லாம் காற்றுவாழ்வனவே... துடுப்புகள் பிணைந்த பறவைகள் மிதந்தே செல்கின்றன துடுப்படிக்கா...