Skip to main content

Posts

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

அழகியசிங்கர்  விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.  பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார்.  அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது.  அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை.  அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன்.   பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார்.  கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன்.   அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை.  மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது.  1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை.  ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள்.  17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார்.   அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் க...

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27வது கூட்டம்

அழகியசிங்கர் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளேன்.  முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசி துவக்கி வைத்தார்.  இரண்டாவது கூட்டமாக நாளை பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் கதைகளும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளுமைகளையும் அறிமுகப்படுத்துவது விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.  நாளை நடக்கும் கூட்டத்திற்கு புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு சந்தியா பதிப்பு வெளியிடு விற்பனைக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன்.  கூட்டத்திற்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 3

அழகியசிங்கர்     ஆரம்பத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைகளில் இசையின் நுட்பத்துடன் கூடிய செய்யுள் வடிவம் தென்படும். படிப்பவரை கவர்ந்திழுப்பதோடு அல்லாமல், ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான வரி அமைப்பைக் கொண்ட கவிதை வரிகள்.  இப்படி எழுதுவது ஞானக்கூத்தன் ஒருவருக்கே சாத்தியமானது.  ஞானக்கூத்தன் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஞானம் உடையவர்.   நாள் முழுவதும் கவிதைக்காகவே வாழ்ந்தவர்.   கவிதைகள் எழுதுவதோடல்லாமல் மற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிப்பவர்.  கவிதைக்காக என்ற நூலில் கவிதைகள் குறித்து சர்ச்சை செய்துள்ளார்.   திராவிட ஆட்சி வந்த புதியதில் அவர் எழுதிய காலவழுவமைதி  என்ற கவிதை பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டது.  தமிழ் என்ற கவிதை பலத்த சர்ச்சைக்கு உள்ளான ஒன்று. சரி, ஞானக்கூத்தன் கவிதைகள் எப்படி உள்ளன என்பதைப் பார்க்கப் போனால், அவர் சொன்ன ஒரு விஷயத்தை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தில் அவர் இப்படி எழுதி உள்ளார்.   'புதுக்கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு.  ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந பிச்சமுர்...

27ஆம் விருட்சம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி...

அழகியசிங்கர் விருட்சம் சந்திப்பின் 26வது கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து கூட்டத்தைச் சிறப்பு செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நம்மிடையே பிரபலமான இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அல்லது அவர்களுடைய படைப்புகளைப் படித்து அது குறித்து சிலாகித்துப் பேசுபவர்களின் கூட்டம் இது.  முதல் கூட்டம் தி ஜானகிராமனைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக உரை நிகழ்ந்தினார்.  அதேபோல் இந்த மாதம் 15ஆம் தேதி பெருந்தேவி புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து உரை நிகழ்ந்த உள்ளார்.  புதுமைப்பித்தன் போல் கநாசு, மௌனி, செல்லப்பா, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி பலர் பேச உள்ளார்கள்.  நீங்கள் எல்லோரும் வந்திருந்து கூட்டத்தை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதோ கூட்டத்திற்கான அழைப்பிதழ்.  இதை எல்லோரும் உங்கள் வலைதளங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

ஞானக்கூத்தனின் படைப்புலகம் -2

அழகியசிங்கர் ஞானக்கூத்தன் கவிதைகளில் அப்படி என்ன விசேஷம்.  கவிதையில் அவர் கையாளும் மொழியின் திறன்.  வாசகனைப் பிடித்து இழுக்கும் வித்தியாசமான அம்சம்.  இதுதான் அவர் கவிதைகளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது.  உதாரணமாக : சைக்கிள் கமலம் என்ற கவிதையைப் பார்ப்போம். அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான் மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள் தம்பினைக் கொண்டு போய்ப் பள்ளியில் சேர்ப்பாள் திரும்பும் பொழுது கடைக்குப் போவாள் கடுகுக்காக ஒரு தரம் மிளகுக்காக மறு தரம் கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள் வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும் வழியில் குழந்தைகள் எதிரப்பட்டாலும் இறங்கிக் கொள்வாள் உடனடியாக குழந்தையும் மாடும் எதிரப்படா வழிகள் எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள் என் மேல் ஒருமுறை விட்டாள் மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள். சைக்கிள் கமலம் என்ற கவிதையில் வண்டி ஓட்டுவது பற்றி கூறிகொண...

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 1

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 1 அழகியசிங்கர் ஞானக்கூத்தனின் ஒரு கவிதையை நான் எப்போதும் மின்சார வண்டியில் என் அலுவலகத்திற்கு பயணம் செல்லும்போது ரசித்துக் கொண்டிருப்பேன்.  அந்தக் கவிதை இதோ: என்ன மாதிரி என்பது அக் கவிதை. என்னை நோக்கி ஒருவர் வந்தார் எதையோ கேட்கப் போவது போல கடையா? வீடா? கூடமா? கோயிலா? என்ன கேட்கப் போகிறாரென்று எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில் அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம் ஒன்றும் கேளாமல் சென்றார் என்ன மாதிரி உலகம் பார் இது. இப்படித்தான் ஞானக்கூத்தன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார்.  இக் கவிதையை படித்துவிட்டு எனக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அவரை நேரில் கூட பார்த்ததில்லை.  ஒரு முறை என் நண்பர் வைத்தியநாதன்தான், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆன்ந்த், காளி-தாஸ், ஆர். ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன் என்று ழ ஏட்டில் எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தினார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரையில் சந்திப்போம்.  நான் சந்தித...

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 72

அழகியசிங்கர்   கவிதை தலைப்பிடப் படாதது ஆத்மாநாம்                                                                           இந்தக் கவிதை எப்படி முடியும் எங்கு முடியும் என்று தெரியாது. திட்டமிட்டு முடியாது என்றெனக்கத் தெரியும் இது முடியும்போது இருக்கும் (இருந்தால்) நான் ஆரம்பத்தில் இருந்தவன் தானா ஏன் இந்தக் கேள்வி யாரை நோக்கி இன்றிரவு உணவருந்தும் நம்பிக்கையில் இங்கிருப்பேன் இப்படியும் ஓர் நம்பிக்கை இருந்த நேற்று எனக்கிருண்ட கணங்கள் அவற்றின் தவளைக் குரல்கள் கேட்கும் அடிக்கடி அதனை ஒதுக்கத் தெரியாமல் தவிக்கையில் நிகழ்ச்சியின் சப்தங்கள் செவிப்பறை கிழிக்கும் நாளை ஓர் ஒளிக்கடலாய் கண்ணைப் பறிக்கும் இருதயம் இதோ இதோ என்று துடிக்கும். நன்றி : காகிதத்தில் கோடு - ஆத்மாநாம் - வெளியீடு : ழ, 39 ஈஸ்வரதாஸ் லாலா தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 - வெளியீடு : மே 1981 -...