Skip to main content

Posts

Showing posts with the label - மிருணா

வாழ்தல் நிமித்தம்

தீர்மானித்துக் கொண்டேன் கலங்குவதில்லை...யென. நம்பிக்கை கொள்ளவோ தாக்குப் பிடிக்கவோ ஏதுமில்லையென்ற தெளிவுக்கு வந்தேன். சாகும் முறை குறித்த குழப்பம் கொஞ்சமும் இல்லை. கடலில் மூழ்குவதென்பது பால பாடம்.(ஆடைகளைக் கவனமாக ஊக்குகளால் இணைப்பது குறித்தகவிதைகளுக்கு நன்றி!). எதற்குமொருமுறை இருக்கட்டுமேயென இறப்புச் செய்தி கேட்கும் முகங்களை மனத் திரையில் ஓட விட்டேன். எதிர்பாரா ஒரு தருணம் கேட்டதொரு பெருவிம்மல். எந்த முகம் அந்த முகம் என விழிக்க நனைந்திருந்தன கண்கள். சுயம் வெட்கி ஆரம்பித்தது யென் வாழ்க்கை குறித்த அத்தனைச் சிரிப்புச்சத்தங்களும்...