Skip to main content

Posts

Showing posts with the label - அ. தியாகராஜன்.

துடைத்து எறிய

  காற்றில்   மிதந்து அல்லது   அல்லாடிப்   பறந்து தன்மீதே குழந்தையின்   கிறுக்கெழுத்தில் நல்ல   நீல   நிற   மசியினில் எழுதப்பட்டிருந்த அந்த   சில   வரிகளைக்   கொண்டு அது   யாரைத்தேடுகின்றது ? மிதந்து   நடனமாட தென்றலையா ? யாராவது   படித்து " ஆஹா "  போடுவதற்கா ? எழுதிய   குழந்தை   வந்து மீதத்தை   எழுதி   முடிக்கவா ? நானறியேன் - எடுத்து என்    காலணியிலிருந்த அழுக்குத்துளியைத் துடைத்தெறிந்தேன் -