கல்லில் உள்ள மீன் கடலுக்குத் திரும்ப விழைகிறது ஆய்வு, சிறிய ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து அது அலுப்புற்றிருக்கிறது வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற பக்கவாட்டுத் தோற்றத்தோடு பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து அது அலுப்புற்றிருக்கிறது. கடலில் மௌனம் மீண்டும் மீண்டும் அலைகிறது அவ்வளவு - தேவையற்றதுமே! தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை பதிக்கும் கணம் வரும் வரை அது மிதக்கிறது - பொறுமையாக. கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும் வீழ்வது என்பது வாழ்பவருக்குச் செய்யும் உபகாரமென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு எறும்பு ஒரு கடத்தல்காரனின் எரியூட்டு போல பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும் தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென. அதற்குத் தெரியும் - ஏன் ஒரு விஞ்ஞானி பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை இரகசிய உவப்பில் வருடுகிறார் என. குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone . எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove. ...