Skip to main content

Posts

Showing posts with the label ரா ஸ்ரீனிவாஸன்

அது கூட

வரட்டுமென்று அனுமதிப்பதா அதனை வாராது தடுப்பதா....... வந்து போய்விட்டது விட்டுவிடு.

சொல்லும் சொல்லமைப்பும்

ஒன்று சொல்லக் கேட்டு சொல்லச் சொல்லி பிறந்தது ஓர் சொல். சொல்லச் சொல்ல சொல் பெருகியது பின்னிப் பின்னி உருவானது ஓர் சொல் வலை சொல் தன்னைத் தானே சொல்லத் துவங்கியது தான் வகித்த வலைக்குள் தானே சிக்கியது சொல். இரண்டு மலரென்ன ஓர் சொல் கிளையென்ற ஓர் சொல்லிலிருந்து காற்றென்ற சொல்லைத் தழுவி மண்ணென்ற சொல் மீது உதிர்கிறது. மண்ணில் புதைந்த விதையென்ற ஓர் சொல் மண்ணைக் கீறி மரமென்ற சொல்லாக முளைத்து வான் என்ற சொல்லைத் தீண்டி நிற்கிறது....

தீவிரவாதக் கவிதை

ஒற்றைத் தோட்டாவை மட்டும் மிச்சம் வைத்து கண்ணுக்குப் பட்டதையெல்லாம் இலக்காக்கிக் குறிவைக்கிறேன் கருந்துளை நீண்ட எனது துப்பாக்கி முனையில். பொருட்களையெல்லாம் குறி வைக்கிறேன்- உயிர்களைக் குறிவைக்கிறேன்- தாவரங்களைக் குறிவைக்கிறேன்- விலங்குகளைக் குறிவைக்கிறேன்- பறவைகளைக் குறிவைக்கிறேன்- மனிதர்களைக் குறிவைக்கிறேன்- உறவுகளைக் குறிவைக்கிறேன்- நண்பர்களைக் குறிவைக்கிறேன்- எதிரிகளைக் குறிவைக்கிறேன்- துரோகிகளைக் குறிவைக்கிறேன்- உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிவைக்கிறேன்- காலூன்றி பூமிக்குக் குறிவைக்கிறேன்- நிமிர்ந்து நின்று வானத்தைக் குறிவைக்கிறேன்- பரிதியையும் நிலவையும் குறிவைக்கிறேன்- கோள்களைக் குறிவைக்கிறேன்- விண்மீன்களைக் குறிவைக்கிறேன்- என் சுட்டுவரல் நுனியில் இந்தப் பேரண்டத்தையே இலக்காக்கிக் குறிவைக்கிறேன்- இவை யாதொன்றையும் சுட்டுவிடாமல் விட்டுவிடுகிறேன். அவை இருந்துவிட்டுப் போகட்டும்... இலக்காக எனக்கு அவற்றின் பெயர்கள் மட்டும் போதுமானதால் பெயர்களையெல்லாம் எடுத்துக் கொள்கிறேன்- பெயர்களின் ஒலிக்குறிப்புகளை எடுத்துக்கொள்கிறேன்- பெயர்களின் பிம்பத்தை எடுத்துக்கொள்கிறேன்- பிம்பங்களின் பிரதிக...