- தேரியின் சிவந்த மண்ணில் மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம் மேல்தளம் இருந்தவர்கள் ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து நம்பிக்கையை நதியாக்கினர் முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும் பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும் அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர் அருகிருந்த நெல்லி மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது தன் துவர்ப்பை இழந்துவிடாது சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர அறை அன்பின் தேவாலயமானது பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும் இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும் இதேதான் பற்றிக்கொண்டாய் விட்டுவிடாது தொடரென்றும் வார்த்தைகள் குலைந்து குலைந்து பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது பயணிக்கிறேன் மயில்தோகையின் வருடல்களோடும் ஓயாது கூவிய சேவலின் இசையோடும்...