நான் இப்பொழுது ஒரு பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் .. பனிக்கட்டிகள் என்னை சுற்றி படர்ந்துள்ளது .. வாடைக்காற்று இதயத்தை தொட்டு செல்கிறது .. பெயர் தெறியா பறவையொன்று " க்கி க்கி" என சப்தமிட்டுக்கொண்டே வானில் பறந்து கொண்டுள்ளது .. கவிதை புத்தகம் கையில் வைத்துள்ளேன் கம்பனி கமாண்டரின் விசில் சுப்தம் கேட்கிறது .. சாய்த்து வைத்திரிந்த இன்சாஸ் துப்பாக்கியை எடுத்துகொண்டேன் .. இப்போது கடமையையும் கவிதையையும் சுமந்துகொண்டு செல்கிறேன் ..