Skip to main content

Posts

Showing posts with the label கார்க்கோ

இரு கவிதைகள்

அவசரக் கூட்டம் உறுப்பினர் வருகை சந்தேகமே நாளை நடத்தலாம் அவசரக் கூட்டம் நாளை என்ன நடந்திடுமோ மறுநாள் ஒருநாள் கணக்கில் வை பிறிதொரு நாளும் காரியம் ரத்து நானும் நீயும் கூடிடலாம் இருவர் சூழலும் இணைய மறுப்பின் ஏண்டா இப்படி அபசகுனம்? தீர்மானங்கள் நிறைவேறும் கவலை வேண்டாம் மாவீரா கூட்டம் நடந்ததாய்க் கணக்கில் வை. அன்னம், கிளி, மயில், மேகம்.......ஆனந்த் நாய்க்குட்டியைத் தூதுவிட்டுநித்யாவைக் கவர்ந்தவன் யார் நம்ம சிவலிங்கம் ஜோடிக் கிளியைப் பரிசளித்து ராமகிருஷ்ணன் கவர்ந்துவிட்டது யாரை நம்ம மீனாட்சியை புத்திசாலிப் பசங்க இந்த மதன்தான் தப்பு செய்து விட்டான் கீர்த்தியைக் கவர்ந்திழுக்க ஆனந்த்தைத் தூதுவிட்டான் அபாயத்தில் குரைக்கவும் தெரியாத நெல்மணிகளைக் கொத்தவும் பயனிலாத அசட்டு ஆனந்தைக் கண்டவுடன் செருப்பைக் காடடினாள் கீர்த்தி செருப்பு விடு தூது பற்றி ஆனந்த் படித்த இலக்கியம் வாழ்வோடியைந்து போனதே மதன்.