Skip to main content

Posts

Showing posts with the label எ தியாகராஜன்

என் அம்மா

அவளுக்கு நன்றகவே தெரியும் மகாபாரதமும் இராமயணமும்- தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லுவாள் அவற்றிலிருந்து தினமும் ஒரு புதிய கதை உண்டு - அவற்றில் ஆயிரக்கணக்கில் கதைகள் உண்டல்லவா? எப்போதும் அவளுக்கு அவைதான்.. படித்துக்கொண்டிருப்பாள்- பிரார்த்தனையின்போதும் அவைதான் சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும் ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று. நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம் அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய என்று சொல்லப்பட்டுள்ளது.... சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தும் அவற்றைச் சொல்லும் போது கண்ணில் நீர் வந்தபோதும்- இராமனின் மேல். சீதையின் மேல் சந்தேகித்து அக்னிப்பிரவேசம் செய்யவைத்த இராமனின் மேல் அவளுக்கு கோபம் வந்ததாக எங்களுக்குத் தெரிந்ததில்லை- அந்த வயதில் நாங்கள் கேட்டதுமில்லை அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும் எங்களுக்குத் தெரியாது.. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே- அது. ஒரு மாதிரியான, பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி நினைக்கையில் வருமே அது போன்றவொரு அருவருப்பு....

புரிவதில்லை கவிதை

உன்னுடைய இந்தக் கவிதைக்கு என்ன அர்த்தம் ஒன்றும் புரியவில்லை ஆச்பிரின் கடித்துப் பாதியாகக் கிடக்கும் ஒரு ஆப்பிள் துண்டு காபியோ அல்லது டீயோ ஏதோ ஒன்றின் ஒரு காய்ந்துபோன கோப்பை- ஒரு இளம் பெண் அரைகுறை ஆடையில் ஒரு மூலையில் சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது- நாற்காலி மீது ஜென் புத்தகம் பாதி திறந்த நிலையில் - தண்ணீர் கொட்டி அது கோடிட்டாற் போல இதுபோன்ற சில வார்த்தைகள் வேறொன்றும் இல்லை - கேட்டால் - புரியாது உனக்கு என்கிறாய் அது சரி இது ஒரு ஓவியமல்லவா எனக்கு கவிதைப் புரிவதில்லை தான் நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்ட...