அவளுக்கு நன்றகவே தெரியும் மகாபாரதமும் இராமயணமும்- தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை சொல்லுவாள் அவற்றிலிருந்து தினமும் ஒரு புதிய கதை உண்டு - அவற்றில் ஆயிரக்கணக்கில் கதைகள் உண்டல்லவா? எப்போதும் அவளுக்கு அவைதான்.. படித்துக்கொண்டிருப்பாள்- பிரார்த்தனையின்போதும் அவைதான் சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும் ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று. நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம் அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய என்று சொல்லப்பட்டுள்ளது.... சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தும் அவற்றைச் சொல்லும் போது கண்ணில் நீர் வந்தபோதும்- இராமனின் மேல். சீதையின் மேல் சந்தேகித்து அக்னிப்பிரவேசம் செய்யவைத்த இராமனின் மேல் அவளுக்கு கோபம் வந்ததாக எங்களுக்குத் தெரிந்ததில்லை- அந்த வயதில் நாங்கள் கேட்டதுமில்லை அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும் எங்களுக்குத் தெரியாது.. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே- அது. ஒரு மாதிரியான, பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி நினைக்கையில் வருமே அது போன்றவொரு அருவருப்பு....