Skip to main content

குற்றச்சாட்டு

தாயிடம் குழந்தை

பால் குடித்ததாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்.

சக்தி பார்த்த சிவன்

தாண்டவமாடியதாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்

இதயம் ரத்தம் பாய்ச்சுவதாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்.

கருவறை மானுடரை அனுமதித்ததாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்
பூ

மலர்ந்ததாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்

காவிக்கு அடியில்

சதை இருந்ததாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்

திராட்சை

மதுவானதாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்

தங்க மாலையைக் கழுத்து அணிந்ததாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்

கைகள் கொடை வழங்கியதாயக்

குற்றம் சாட்டுகிறார்கள்

வள்ளுவர்

காமத்துப்பால் எழுதியதாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்

கண்கள் இமை

திறந்து

காட்சி உண்டதாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்

சுவாசித்தலை

அவ்வப்போது செய்ததாய்க்

குற்றம் சாட்டுகிறார்கள்

காற்றால் இலைகள் அசைந்ததாகக்

குற்றம் சாட்டுகிறார்கள்.

Comments